ஆண்களால் ஏமாறும் ஆண்கள் -ஓரின சேர்க்கை ஆப் மூலம் ஒரு வாலிபருக்கு நடந்த சோகம்

 

ஆண்களால் ஏமாறும் ஆண்கள் -ஓரின சேர்க்கை ஆப் மூலம் ஒரு வாலிபருக்கு நடந்த சோகம்


ஒரு வாலிபரை ஓரின சேர்க்கை ஆப் மூலம் மிரட்டி பாலியல் கொடுமை செய்து ப்ளாக் மெயில் செய்த கூட்டத்தினை போலீசார் கைது செய்தனர்

ஆண்களால் ஏமாறும் ஆண்கள் -ஓரின சேர்க்கை ஆப் மூலம் ஒரு வாலிபருக்கு நடந்த சோகம்


டெல்லிக்கு அருகிலுள்ள உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் சிக்கந்திராபாத்தில் வசிக்கும் ஒரு 20 வயதான வாலிபர் ‘க்ரிடர்’ என்ற ஓரின சேர்க்கை ஆப் மூலம் பல நண்பர்களுடன் அரட்டையடித்து வந்தார் .அப்போது அவருடன் கவுதம் என்ற வாலிபர் நட்பு கொண்டு பேசிவந்தார் .பின்னர் கவுதம் அவரை நேரில் சந்திக்க அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹௌஸிற்கு வர சொன்னார் .அவரின் பேச்சை நம்பி கவுதம் அங்கு சென்றார் .
அப்போது அங்கு கவும் (20) மற்றும் கவுரவ் (23) , சச்சின் (26) மற்றும் மோஹித் (25) ஆகியோர் அங்கு இருந்தனர்
அவர்கள் அந்த வாலிபரை அந்த அறைக்குள் வந்ததும் கட்டி போட்டு இயற்கைக்கு மாறான வகையில் உறவு கொண்டார்கள் .பின்னர் அதை வீடியோ எடுத்தனர் .அதன் பிறகு அந்த நால்வரும் அந்த வாலிபரை 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர் .பணம் தரவில்லையென்றால் இந்த வீடியோவை ஊடகத்த்தில் வெளியிடுவதாக மிரட்டினர் .அதன் பிறகு அந்த வாலிபர் அவர்களிடம் பணம் கொண்டு வருவதாக கூறி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து கவும் (20) மற்றும் கவுரவ் (23) , சச்சின் (26) மற்றும் மோஹித் (25) ஆகியோரை கைது செய்தனர் . போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் , டெல்லி மாநகராட்சியின் உதவி பொறியாளரை இதே போல் மிரட்டி அவரது பெற்றோரிடமிருந்து ரூ .1.80 கோடி பணம் பறித்ததை கண்டுபிடித்தனர் .