மூன்று மொழிகளில் LPL தொடர் தீம் பாடல்!

 

மூன்று மொழிகளில் LPL தொடர் தீம் பாடல்!

இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் பல நாடுகளையும் அவ்வாறு நடத்த தூண்டியுள்ளன. ரசிகர்கள் அதிகரிப்பது ஒருபக்கம், அதன் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இலங்கையில் ஐபிஎல் போட்டிகள் போலவே எல்.பி.எல் எனும் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது.

மூன்று மொழிகளில் LPL தொடர் தீம் பாடல்!

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 21-ம் தேதி எல்.பி.எல் போட்டி இலங்கையில் தொடங்குகிறது.

வெளிநாட்டு வீரர்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஆடுகின்றனர். டூ பிளஸி, ரஸல் உள்ளிட்ட வீரர்கள் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்ததும், இலங்கையில் எல்.பி.எல் போட்டித் தொடரில் விளையாடச் செல்வார்கள்.

மூன்று மொழிகளில் LPL தொடர் தீம் பாடல்!

எல்.பி.எல் போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்த தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அப்பாடல் வெளியாகியுள்ளது. சந்தூஷ் சரிகம இசையமைத்துள்ள பாடல் யூ டியூபில் கேட்கும் வகையில் கிடைக்கின்றன.

தமிழ் பாடல் வரிகளை கே.கே. பிரகாஷ் எழுதியுள்ளார். ராப் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல் 1.13 நிமிடங்கள் நீளம் கொண்டிருக்கிறது.