இலங்கையில் எல்.பி.எல் தொடர் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்!

 

இலங்கையில் எல்.பி.எல் தொடர் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டுக்கான முறையையே மாற்றி அமைத்தது. ஆம், வெறும் விளையாட்டு என்று இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய சேர்க்கப்பட்டன. அதனால், இதற்கான பார்வையாளர்கள் அதிகரித்தனர். மேலும் போட்டியை நடத்துபவர்களுக்கு லாபமும் நிறைய கிடைத்தது. மற்ற நாடுகளில் இதுபோன்ற போட்டிகளை நடத்தப்படுகின்றன.

இலங்கையில் எல்.பி.எல் தொடர் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்!

அப்படித்தான் இலங்கை நாட்டிலும் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஸ்ரீ லங்கா பிரீமியர் லீல் (SLPL) என்று பெயரிட்டு, 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை எல்.பி.எல் போட்டிகள் நவம்பர் 14 – ம் தேதி தொடங்கும் என்று அறிவித்தது. ஆனால், அந்தத் தேதியிலும் தொடங்கப்படாது என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் எல்.பி.எல் தொடர் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்!

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், செய்த பின் அவர்களைத் தனிமைப்படுத்தவும் வேண்டியிருப்பதால், இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறதாம்.

மேலும், இந்தியாவில் ஐபிஎல் போட்டியில் ஆடும் சில வீரர்கள் இலங்கை எல்.பி.எல் போட்டியில் ஆடுகிறார்கள். அதனாலும் தேதியை மீண்டும் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

தற்போதைய மாற்றத்தின்படி நவம்பர் 14 -ம் தேதிக்குப் பதிலாக, நவம்பர் 21 -ம் தேதி எல்.பி.எல் போட்டித் தொடர் தொடங்கும்.