இலங்கையில் LPL போட்டிகள் இன்று தொடக்கம் – அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில்!

 

இலங்கையில் LPL போட்டிகள் இன்று தொடக்கம் – அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில்!

கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலையை மாற்றி அமைத்த பெருமை இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு உண்டு. ஆமாம். வெறும் விளையாட்டு என்பது மட்டுமல்லாமல், அதில் பல பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்தனர். அதனால், பெரும் வெற்றி பெற்றது. அதனால் உலகம் முழுவதுமே பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற தொடங்கிவிட்டன.

இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், எட்டாண்டுகளாக நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது.

இலங்கையில் LPL போட்டிகள் இன்று தொடக்கம் – அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில்!

இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

இலங்கையில் LPL போட்டிகள் இன்று தொடக்கம் – அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில்!

எல்.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படியே இன்று மாலை 7 மணியளவில் ஹம்பண்ட்தோட்டையில் உள்ள மகிந்த ராஜபக்‌ஷே மைதானத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களுக்காக அனைத்துப் போட்டிகளும் இதே மைதானத்தில் நடக்க உள்ளன.