பிரித்த பெற்றோர்கள் -வெறுத்த காதலர்கள் -கடைசியில் ஹோட்டலில் என்ன நடந்திச்சி தெரியுமா ?

 

பிரித்த பெற்றோர்கள் -வெறுத்த காதலர்கள் -கடைசியில் ஹோட்டலில் என்ன நடந்திச்சி தெரியுமா ?

புதுடெல்லியில்  உள்ள நபி கரீம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு ஹோட்டலின் அறைக்குள் ஒரு பெண்ணும் அவரது காதலரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தற்கொலை செய்து கொண்டனர் .

டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியில் வசிக்கும் 30 வயதான பெண்ணும் .30 வயதான ஆணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .அவர்களின் காதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது .இப்போது அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி ,கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கான வேலையில் ஈடுபட்டு வந்தனர் .அதனால் அந்த பெண் தன்னுடைய பெற்றோரிடம் அவர் காதலிக்கும் வாலிபரை பற்றியும் ,அவரை திருமணம் செய்து கொள்வதை பற்றியும் பேசினார் .

அதை கேட்டுஅவரின் பெற்றோர் கோபமுற்றனர் .மேலும் அந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு பொருத்தமில்லாதவர் என்றும் கூறியுள்ளார்கள் .அதுமட்டுமல்லாமல் உடனடியாக வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்து விட்டனர் ,,அதனால் இந்த காதலர்கள் இருவரும் கடுமையான மன உளைச்சலில் இருந்தார்கள் .அதனால் அவர்களிருவரும்  கடந்த வாரம் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினார்கள் .அதன் பிறகு  அன்று இரவு இருவரும் அங்கேயே தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள் .இது பற்றி போலீசுக்கு தெரிந்ததும் போலீசார் அந்த ஹோட்டலுக்கு விரைந்தனர் .பிறகு  அங்கிருந்த தற்கொலை குறிப்பை கைப்பற்றிய போது, அதற்கான காரணம் காதல் தோல்வி என்று தெரிய வந்தது .பின்னர் இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .