சிறுமியுடன் நெருக்கமாக இருந்த காதலன் : பார்த்துவிட்ட சிறுவனை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!

 

சிறுமியுடன்  நெருக்கமாக இருந்த காதலன் : பார்த்துவிட்ட சிறுவனை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குளத்தில் 8 வயது சிறுவன் ஒருவன் நேற்று கொடூரமாக கொல்லப்பட்ட முறையில் கிடந்தான். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி அங்கிருந்த தடயங்களை கொண்டு விசாரணையை துவங்கினர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்ற 21 வயது இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் சிறுவனை அஜித் மற்றும் அவரின் காதலி இருவரும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது.

சிறுமியுடன்  நெருக்கமாக இருந்த காதலன் : பார்த்துவிட்ட சிறுவனை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!

இதுகுறித்து இளைஞர் அஜித் அளித்த வாக்குமூலத்தில், “பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் நானும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் எனது காதலியும் புத்தூர் பள்ளபாளையம் அருகே உள்ள குளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தோம். இதை சிறுவன் பவனேஷ் பார்த்துவிட்டான். சிறுவன் பவனேஷ் வீடும் எனது காதலி வீடும் அருகருகே தான் உள்ளது. இதனால் சிறுவன் பவனேஷ் இது குறித்து எனது காதலி வீட்டில் சொல்லி விடுவான் என்று பயந்து அவனை கொல்ல திட்டமிட்டோம். தொடர்ந்து அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து சிறுவனை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டோம்” என்று கூறியுள்ளார்.

சிறுமியுடன்  நெருக்கமாக இருந்த காதலன் : பார்த்துவிட்ட சிறுவனை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!

இதையடுத்து சிறுவனை கொலை செய்த வழக்கில் இளைஞர் அஜித்தை கைது செய்த போலீசார் ஊத்துக்குளி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலியான சிறுமி கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.