காதலனுக்கு கல்யாணமாயிடுச்சி -இது காதலிக்கு தெரிஞ்சிடுச்சி -அடுத்து நடந்த விபரீதம்.

 

காதலனுக்கு கல்யாணமாயிடுச்சி -இது காதலிக்கு தெரிஞ்சிடுச்சி -அடுத்து நடந்த விபரீதம்.

ஒரு கல்யாணமான காதலன் தன்னுடைய முன்னாள் காதலி வீட்டில் தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

காதலனுக்கு கல்யாணமாயிடுச்சி -இது காதலிக்கு தெரிஞ்சிடுச்சி -அடுத்து நடந்த விபரீதம்.

உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஃபரித்பூரில் வசிக்கும் 25வயதான நபர் ,பக்கத்து ஊரில்  உள்ள 20 வயதான பெண்ணை காதலித்து வந்தார் .இந்நிலையில் திடீரென அந்த காதலனுக்கு அவரின் வீட்டில் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள் .அதன் பிறகு அந்த காதலனுக்கு அந்த புது மனைவி மூலம் ஒரு குழந்தையும் பிறந்து  விட்டது .

ஆனால் அந்த காதலன் இந்த கல்யாணமான விஷயத்தையும் ,குழந்தை பிறந்த விஷயத்தையும் தன்னுடைய முன்னாள் காதலியிடம் மறைத்து விட்டு அவரோடு சமூக ஊடகத்தின் மூலம் அரட்டையடித்து வந்துள்ளார் .சில நாட்கள் அவரோடு பல இடங்களில்  சந்தித்தும் வந்துள்ளார் .இந்நிலையில் அந்த காதலிக்கு சிலர் மூலம் அவரின் காதலனுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை யாரோ சொல்லி விட்டார்கள் .இதனால் கடுப்பான அந்த காதலி அவரை விட்டு பிரிந்து சென்றார் .அவர் போன் பேசினாலும் ,நேரில் சந்திக்க வந்தாலும் அவரை சந்திக்க மறுத்து விட்டார் .

அதனால் அந்த காதலன் அவரின் முன்னாள் காதலியை சந்திக்க முடியாமல் வேதனையில் துடித்தார் .பின்னர் கடந்த வாரம் திங்களன்று அவரை தேடி அவரின் வீட்டிற்கே சென்றார் .ஆனால் அப்போது அந்த காதலி அவரிடம் முகம் கொடுத்து பேசாததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் .அதன்  பிறகு அங்கு அவர் தன்னை தீ வைத்து கொளுத்தி கொண்டார் .உடனே அவரின் உடலில் தீ பிடித்து எரிவதை  பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

காதலனுக்கு கல்யாணமாயிடுச்சி -இது காதலிக்கு தெரிஞ்சிடுச்சி -அடுத்து நடந்த விபரீதம்.