கருவை கலைக்க சொன்ன காதலன் -கல்யாணம் செய்ய சொன்ன காதலி -கடைசியில் நடந்த விபரீதம்

 

கருவை கலைக்க சொன்ன காதலன் -கல்யாணம் செய்ய சொன்ன காதலி -கடைசியில் நடந்த விபரீதம்

கல்யாணத்திற்கு வற்புறுத்திய காதலியின் கர்ப்பத்தை கலைத்து ,அவரை தாக்கிய காதலனை போலீசார் கைது செய்தனர்

கருவை கலைக்க சொன்ன காதலன் -கல்யாணம் செய்ய சொன்ன காதலி -கடைசியில் நடந்த விபரீதம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு  24 வயது பெண், குருகிராமின் சக்கர்பூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி விஹாரில் வீட்டு உதவியாளராக பணிபுரிகிறார். அவர் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த ஓட்டுநருடன் காதலில்  விழுந்தார் .அந்த காதலியோடு அந்த காதலன் உல்லாசமாக இருந்ததால்  அந்த பெண் கர்ப்பமானார் .அதனால் அவர் அந்த காதலனிடம் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினார் .ஆனால் அந்த காதலனோ கல்யாணத்திற்கு சம்மதிக்காமல் அந்த காதலியின் வயிற்றில் வளரும் வாரிசை அழிக்க சொன்னார் .ஆனால் அதற்க்கு அந்த  பெண் மறுத்தார் .

அதன் பிறகு அந்த காதலனும் அவரின் நண்பரும் அந்த பெண்ணை டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராமிற்கு வர சொன்னார்கள் .அங்கு கடந்த வியாழக்கிழமையன்று இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கினார்கள் .அதன் காரணமாக அந்த பெண்ணுக்கு ஐந்து மாத குழந்தை ,இறந்த நிலையில் குறை பிரசவம் ஆனது .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு உடல் நிலை மோசமானது அதனால் அவரை அங்குள்ளவர்கள் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அந்த பெண் இருக்கிறார் .இந்நிலையில் அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த காதலன் மற்றும் அவரின்  நண்பர் ஆகியோர் மீது போலீசார்  பல பிரிவுகளில் வழக்கு பதிந்தனர் .பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர் .

கருவை கலைக்க சொன்ன காதலன் -கல்யாணம் செய்ய சொன்ன காதலி -கடைசியில் நடந்த விபரீதம்