பிக் பாஸ் வீட்டுக்குள் மலரும் காதல்: யார் அந்த ஜோடி?!

 

பிக் பாஸ் வீட்டுக்குள் மலரும் காதல்: யார் அந்த ஜோடி?!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே சண்டை, கேம் பிளானிங், கேமரா கான்சியஸ், வாக்குவாதம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 4. கடந்த சீசனில் கவின் லாஸ்லியா காதல் வயப்பட்டது போல, இந்த சீசனில் எந்த ஜோடி அமையும்? என நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர். குறிப்பாக பாலாவுக்கும் ஷிவானிக்கும் ஏக போக வரவேற்பு இருக்கிறது என்றே சொல்லலாம்.

பிக் பாஸ் வீட்டுக்குள் மலரும் காதல்: யார் அந்த ஜோடி?!

அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகளை, காதல் பாடல்களுடன் எடிட் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் மலந்திருப்பது போல இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் மலரும் காதல்: யார் அந்த ஜோடி?!

அதில், ‘கேபி தான் பேசாதது உனக்கு வருத்தமே இல்லையா என பாலாவிடம் கேட்கிறார். அதற்கு பாலா எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? என மனசுல இருந்தா நேரடியா சொல்லிடுவேன் என கூறுகிறார். உடனே கேபி, பாலாவை துரத்திச் செல்வது போல புரோமோ முடிகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் மலரும் காதல்: யார் அந்த ஜோடி?!

‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ’ என்ற காதல் பாடலுடன் இந்த புரோமோ வெளியாகி இருப்பது தான் ஹைலைட். ஆரவ், கவின் வரிசையில் இந்த சீசனின் காதல் மன்னன் பாலா தான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பாலா யாருடன் காதல் வயப்படுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…