கும்பகோணம் அருகே காதல்ஜோடி தற்கொலை… பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவு…

 

கும்பகோணம் அருகே காதல்ஜோடி தற்கொலை… பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவு…

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் தூக்கிட்டும், காதலி விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் அழகர். இவர் கபிஸ்தலம் அருகேயுள்ள பொன்பேத்தி கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்வரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில். பவித்ராவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அழகர் மற்றும் பவித்ரா ஆகியோர் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தனர்.

இதனை அடுத்து, நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் இருசக்கர வகானத்தில் கும்பகோணம் அருகேயுள்ள கல்லூர் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்குள்ள மரத்தில் அழகர் தூக்கிட்டும், அருகில் பவித்ரா விஷத்தை குடித்தும் தற்கொலை செய்துகொண்டனர். இன்று காலை வயல்வெளிக்கு சென்ற அந்தபகுதி மக்கள் காதலர்கள் தற்கொலை செய்துகொண்டதை கண்டு, சுவாமிமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்ட போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.