கல்லூரியில் வளர்ந்த காதல்… பெற்றோர்கள் எதிர்ப்பு!- திருமணம் செய்து உயிரை மாய்த்த காதல் ஜோடி

 

கல்லூரியில் வளர்ந்த காதல்… பெற்றோர்கள் எதிர்ப்பு!- திருமணம் செய்து உயிரை மாய்த்த காதல் ஜோடி

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி காதல் ஜோடி கோயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்ன சேலத்தில் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்குமார். இதேபோல் செம்பாகுறிச்சியை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள கலை கல்லூரியில் படித்து வந்துள்ளனர். கல்லூரி படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம் நாளாடைவில் காதலாக மாறியுள்ளது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஈரியூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு கோயிலின் வெளிபுற பகுதியில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சாமி கும்பிட வந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் , இருவரின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.