கோவில் வளாகத்தில் காதல்ஜோடி தூக்கிட்டு தற்கொலை!

 

கோவில் வளாகத்தில் காதல்ஜோடி தூக்கிட்டு தற்கொலை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார். இவர் காட்டுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடன் நயினார்பாளையம் அருகே உள்ள செம்பாகுறிச்சியை சேர்ந்த கவிதா என்பவரும் உடன் படித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதல் கதை இரு வீட்டாருக்கும் தெரியவர, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவில் வளாகத்தில் காதல்ஜோடி தூக்கிட்டு தற்கொலை!

இந்நிலையில் காட்டு கோட்டை அருகே அருஞ்சோலை அம்மன் கோயில் மரத்தில் குமார் – கவிதா காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கோவில் வளாகத்தில் காதல்ஜோடி தூக்கிட்டு தற்கொலை!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் குமார் -கவிதா சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.