மக்களின் தலையில் மண்ணை வாரி போட தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியா ? எடப்பாடி பழனிசாமியின் முக்கிய கோரிக்கை!

 

மக்களின் தலையில் மண்ணை வாரி போட தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியா ?  எடப்பாடி பழனிசாமியின் முக்கிய கோரிக்கை!

தமிழ் நாட்டில் மீண்டும் லாட்டரி புழக்கத்தை கொண்டு வந்து ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் தலையில் மண்ணை வாரி போட தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியா ?  எடப்பாடி பழனிசாமியின் முக்கிய கோரிக்கை!

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும் ,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஒரு உன்னத நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தையும் சீரழித்தார். அப்போதுதான் வெளிமாநில லாட்டரி தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டது.
ஒரு சீட்டின் விலை 10 ரூபாய் என்றும் பரிசு ஒரு கோடி என்றும் மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம் மாதம் ஒருமுறை குலுக்கள் என்ற நிலை மாறி, ஒரு நம்பர் லாட்டரி முதல் பல கோடி ரூபாய் வரை பரிசு என்று ஒரு நாளைக்கு குறைந்தது 50 விதமான நகைகள் விற்பனை தமிழகத்தில் நடைபெற்றது.

மக்களின் தலையில் மண்ணை வாரி போட தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியா ?  எடப்பாடி பழனிசாமியின் முக்கிய கோரிக்கை!

இதன் காரணமாக குதிரை ரேஸ், சூதாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது . வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கள்ள நோட்டு அடிப்பது போல போலி லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன. மக்கள் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி அப்பாவி ஏழை எளிய மக்களை மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும் வாழ்வையும் இழந்தார்கள். இந்த லாட்டரி சீட்டு மோகம் சமுதாயத்தில் புரையோடிப் போய் பல ஆண்டுகள் நம் மக்களை சீரழித்தது.பல்வேறு காலகட்டங்களில் தனியார் லாட்டரிகளால் பணத்தை இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்ட அவலம் நிகழ்ந்தது. புரட்சித் தலைவருக்குப் பிறகு இயக்கத்தையும் தமிழகத்தையும் காத்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக 2001 இல் ஆட்சி அமைத்த பின் லாட்டரி கொள்ளையரின் பிடியில் இருந்து மக்களை காக்க முடிவு செய்தார்கள்.அதன்படி 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு கொள்கை முடிவு எடுத்து ஒரே கையெழுத்தில், ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் அடுத்த பெருமை மாண்புமிகு அம்மா அவர்களை சாரும் . இந்த சட்டத்திற்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள் உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து தோல்வியை சந்தித்தனர். அம்மாவின் ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கனின் பிடியில் இருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களின் தலையில் மண்ணை வாரி போடசந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்கு தெரியும் என்று கொக்கரித்த இவர்கள் லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனியார் லாட்டரி ஏஜென்ட்டுகள் கொள்ளையடிக்கவும், அதன்மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டு திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயை பெருக்க வேறு பல நல்ல வழிகளை தேட வேண்டும். தமிழகத்தின் ஏழை , எளிய மக்களை காப்பாற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவந்தால் தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். எனவே லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாமென கழகத்தின் சார்பில் எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.