தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கொட்டிக்கிடந்த நூற்றுக்கணக்கான ஆணுறை!

 

தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கொட்டிக்கிடந்த நூற்றுக்கணக்கான ஆணுறை!

கர்நாடகாவில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடந்த ஆணுறைகள் அப்பகுதி மக்களை முகம் சுளிக்கவைத்தது.

தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கொட்டிக்கிடந்த நூற்றுக்கணக்கான ஆணுறை!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் துமகூரு நகரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதி கியாட்சந்திரா. நேற்று இரவு துமகூரு- சிமோகா தேசிய நெடுஞ்சாலையில் கியாட்சந்திரா என்ற பகுதியை கடந்து செல்லும் போது பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அங்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை நெடுகிலும் ஆணுறைகள் கொட்டப்பட்டிருந்தன.

சாலையில் செல்லும் பொதுமக்கள் இந்த காட்சியை கண்டு முகம் சுளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் குப்பைகளை எடுத்து செல்லும்போது விபத்தாக ஆணுறைகள் சாலையில் கொட்டப்பட்டனவா அல்லது மர்ம நபர்கள் வேண்டுமென்றே சாலையில் கொட்டி சென்றார்களா என காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.