மனைவியை இழந்து, மானமிழந்து, கம்பி எண்ணும் கணவன் – கள்ளக்காதலால் வந்த வினை!

 

மனைவியை இழந்து, மானமிழந்து, கம்பி எண்ணும் கணவன் – கள்ளக்காதலால் வந்த வினை!

எகிப்தில் உள்ள கெய்ரோவின் வடக்கே , டகாஹ்லியா கவர்னட்டில் உள்ள ஒரு கிராமத்தில் ஈமான் என்ற 20 வயது பெண் தன்னுடைய 9 மாத குழந்தை மற்றும் ஹுசைன் என்ற துணி வியாபாரம் செய்யும் கணவருடன் நிறைய கனவுகளுடன் வாழ்ந்து வந்தார் .ஆனால் விதி அவரை வாழவிடாமல் குறிகிய காலத்தில் உயிரை பறித்துக்கொண்டது .

காரணம் அவரின் கணவர் ஹுசைனுக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம். ஆம் அவர் அந்த பெண்ணை கட்டிக்கொள்ள மனைவியை செலவில்லாமல் பொய் குற்றசாட்டு கூறி விவகாரத்து செய்ய திட்டமிட்டார். அதனால் அவரின் கடை ஊழியர் அஹமதுவை அவரின் மனைவியை பலாத்காரம் செய்ய அனுப்பினார் .அதன்மூலம் அவருக்கும் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது என்று கூறி அவரை கழட்டி விட திட்டமிட்டிருந்தார் .ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. அவர்களின் திட்டப்படி அஹ்மது ஈமானை கெடுக்க வீட்டிற்கு சென்றபோது அவர் கூச்சலிட்டு, தடுக்க முற்பட்ட அதிர்ச்சியில் அருகே இருந்த குழந்தையின் முன்னாலேயே உயிரிழந்தார் .

மனைவியை இழந்து, மானமிழந்து, கம்பி எண்ணும் கணவன் – கள்ளக்காதலால் வந்த வினை!
இந்த விஷயம் போலீசாருக்கு தெரிந்து விசாரித்த போது அவரின் கணவரின் சதித்திட்டம் அம்பலமானது. இப்போது அவரை போலீசார் சிறையிலடைத்துள்ளனர் இந்த விஷயம் எகிப்தையே உலுக்கியுள்ளது.