லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் தந்தை – மகன் பலி!

 

லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் தந்தை – மகன் பலி!

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரியின் மீது ஆம்னிவேன் மோதிய விபத்தில் முன்னாள் விமானப்படை வீரர் மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கதிர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (77). ஓய்வுபெற்ற விமானப்படை வீரர். இவரது மனைவி பாரதி. இவர்களது மகன் மணிகண்டன். உடல்நல குறைவு காரணமாக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜன், நேற்று மனைவி மற்றும் மகனுடன் ஆம்னி வேனில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் தந்தை – மகன் பலி!

வேனை பட்டிவீரன்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். வேடச்சந்தூர் அருகே ரெங்கநாதபுரம் பகுதியில் திண்டுக்கல் – கரூர் நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜன், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பாரதி மற்றும் ஓட்டுநர நாகராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூம்பூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.