கயத்தாறு அருகே வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 

கயத்தாறு அருகே வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற சாலையில் திடீரென லாரி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு கோனார்கோட்டை பகுதியில் இருந்து, தாழையூத்துக்கு வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை தென்காசி மாவட்டம் கரிசல்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ஓட்டிச் சென்றார்.

கயத்தாறு அருகே வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

வடக்கு கோனார்கோட்டையில் புறப்பட்டு சிறிது தூரத்தில் சென்றபோது, லாரியில் இருந்து திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட பேச்சிமுத்து வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, கீழே இறங்கி உயிர் தப்பினார். அதற்குள்ளாக தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்த விட்டு எரிந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து கயத்தாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.