மின் கம்பியில் உரசி பற்றி எரிந்த வைக்கோல் லாரி… ஓட்டுநர் உடல் கருகி பலி!

 

மின் கம்பியில் உரசி பற்றி எரிந்த வைக்கோல் லாரி… ஓட்டுநர் உடல் கருகி பலி!

நாகை

வேதாரண்யம் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பி மீது உரசி தீ பிடித்ததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ரகுபதி (54). இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தலைஞாயிறு காடந்தேத்தி பகுதியில் லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரதான சாலையில சென்றபோது எதிர்பாராத விதமாக தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசி வைக்கோல் லாரி தீ பற்றியது.

மின் கம்பியில் உரசி பற்றி எரிந்த வைக்கோல் லாரி… ஓட்டுநர் உடல் கருகி பலி!

இதனை அறிந்த, ரகுபதி, அருகில் குடியிருப்புகள் இருந்ததால் ஆள் இல்லாத இடத்திற்கு லாரியை ஓட்டிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அதற்குள்ளாக முழுவதும் தீ பரவிய நிலையில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனை கண்ட, அந்த பகுதி மக்கள் தீக்காயமடைந்த ரகுபதியை மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் ரகுபதி, சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.