சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல் – 6 பேர் படுகாயம்!

 

சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல் – 6 பேர் படுகாயம்!

கோவை

மேட்டுப்பாளையம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் தம்பதி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் கல்லார் அருகே உள்ள தூரிபாலம் பகுதியில், நேற்றிரவு ஊட்டி நோக்கி சென்ற லாரி ஒன்று டயர் வெடித்ததால், ஓட்டுநர் லாரியை சாலையோரம் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த லாரி, சாலையோரம் நின்ற லாரியின் மீது மோதியது.

சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல் – 6 பேர் படுகாயம்!

இதில் 2 லாரிகளும் சாலையோரம் இருந்த சாந்தாமணி என்பவரது வீட்டின் மீது கவிழ்ந்தன. இந்த விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாந்தாமணி மற்றும் அவரது பேரன் ரஞ்சித் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியில் வந்த சேரம்பாடியை சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி விஜயலட்சுமி(45), மகன் கார்த்திக்(28), கவிதா(18) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், இருவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.