பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து சென்ற 3லாரிகள் மோதி விபத்து

 

பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து சென்ற  3லாரிகள் மோதி விபத்து

தருமபுரி அருகே தொப்பூரில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து சென்ற மூன்று லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்தனர்

பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து சென்ற  3லாரிகள் மோதி விபத்து

தருமபுரி மாவட்டம், தொப்பூரில்,செப்டிக் டேங்க் க்ளீனிங் லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது, கற்கள் பாரத்துடன் பின்னால் சென்ற லாரி ஒன்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து நின்றிருந்த செப்டிக் டேங்க் க்ளீனிங் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது, இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தை ஏற்படுத்தியது இந்த விபத்தில் இருவர் உயிரிழிந்துள்ளனர், காயமடைந்த பத்து பேர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்

விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்