ராமர் எல்லோரோடும் எல்லா இடத்திலும் இருக்கிறார்! – பிரியங்கா காந்தி வாழ்த்து

 

ராமர் எல்லோரோடும் எல்லா இடத்திலும் இருக்கிறார்! – பிரியங்கா காந்தி வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி நாளை தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கட்டுமானப் பணி நாளை நடக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

ராமர் எல்லோரோடும் எல்லா இடத்திலும் இருக்கிறார்! – பிரியங்கா காந்தி வாழ்த்து

இதற்காக அயோத்தியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

http://


அதில், “தேசிய ஒருமை, சகோதரத்துவம் மற்றும் சமாச்சார சபைக்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்கும் என்று கூறியுள்ளார்.

ராமர் எல்லோரோடும் எல்லா இடத்திலும் இருக்கிறார்! – பிரியங்கா காந்தி வாழ்த்து

மேலும், எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் பண்புகள் ஆகும். ராமர் எல்லோரிடமும் எல்லா இடத்திலும் இருக்கிறார்.
ராமர் மற்றும் தாய் சீதாவின் அருளால், ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இது தேசத்தின் ஒற்றுமை மற்றும் சகோதரத்தின் அடையாளமாக விளங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.