இப்படி விளக்கேற்றி பாருங்கள்; நிச்சயம் கை மேல் பலன் கிட்டும்!

 

இப்படி விளக்கேற்றி பாருங்கள்; நிச்சயம் கை மேல் பலன் கிட்டும்!

வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எந்த வழிபாடாக இருந்தாலும் முதலில் விளக்கு ஏற்றி அதை ஆரம்பிப்பது பலரின் வழக்கமாக உள்ளது.

இப்படி விளக்கேற்றி பாருங்கள்; நிச்சயம் கை மேல் பலன் கிட்டும்!

பொதுவாகவே காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம் . குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றி நமக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்வதன் மூலம் நாம் பல பலன்களை அடையலாம் என்கிறார்கள் ஆச்சாரிய பெருமக்கள்.அதேபோல் விளக்கேற்றி இறைவனுக்கு ஏதேனும் ஒரு உணவை சமைத்து நெய்வேத்தியம் படைக்கும் போது உங்களுக்கான சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.

இப்படி விளக்கேற்றி பாருங்கள்; நிச்சயம் கை மேல் பலன் கிட்டும்!

ஆனால் உங்கள் குடும்பத்தின் மீதுள்ள திருஷ்டியை கழிக்கவும் விளக்கு ஏற்றலாம் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் எலுமிச்சையை சரிபாதியாக்கி அதில் மஞ்சள் தேய்த்து வைக்க வேண்டும். அதேபோல் வாசலில் இரு பக்கமும் அகல் விளக்குகள் மாலை வேளையில் ஏற்றி வைக்க வேண்டும். எலுமிச்சையும் , அகல் விளக்கையையும் வைத்துவிட்டு பூஜை அறையில் வழக்கம் போல் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி செய்து வரும் பட்சத்தில் வீட்டு திருஷ்டி போகும் . அத்துடன் அம்மனுக்கு முருகப்பெருமானுக்கும் பிடித்த செந்நிற மலர்களை சூட்டி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் உங்களுக்கும் சகல பிரச்சினைகளும் விரைவில் நீங்கும் .