பீகார் அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன சிராக் பஸ்வான்

 

பீகார் அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன சிராக் பஸ்வான்

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் வாழ்த்து தெரிவித்தார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாரை சிராக் பஸ்வான் கடுமையாக தாக்கி பேசினார். உதாரணமாக, பீகாரிலிருந்து மக்கள் புலம்பெயருவதை தடுக்க நிதிஷ் குமாருக்கு வாக்களிக்க கூடாது என்பது முக்கியம். ஐக்கிய ஜனதா தளத்துக்கு அளிக்கும் ஒரு வாக்கும் பீகாரை அழிவுக்கு தள்ளும் அவரது கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றே ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் களம் இறங்கிய அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை சிராக் பஸ்வான் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பீகார் அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன சிராக் பஸ்வான்
நிதிஷ் குமார்

இந்த சூழ்நிலையில் நேற்று பீகார் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ் குமாருக்கு லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், மரியாதைக்குரிய நிதிஷ் குமார் ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள் . அரசு தனது பதவி காலத்தை நிறைவு செய்யும் என்றும் நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பீகார் அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன சிராக் பஸ்வான்
பா.ஜ.க.

நான் உங்களுக்கு பீகார் முதலில், பீகாரி முதலில் பார்வை ஆவணத்தை அனுப்புகிறேன். இது 4 லட்சம் பீகார் மக்களால் தயாரிக்கப்பட்டது. இதன்மூலம் எந்தவொரு பணியையும் உங்களால் நிறைவு செய்ய முடியும். உங்களுக்கும், உங்களை முதல்வராக்கிய பா.ஜ.க.வுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார்.