வெட்டுக்கிளிகளால் இரு மாநிலங்களில் கடும் பாதிப்பு – தடுக்க குழு அமைத்தது மத்திய அரசு

 

வெட்டுக்கிளிகளால் இரு மாநிலங்களில் கடும் பாதிப்பு – தடுக்க குழு அமைத்தது மத்திய அரசு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இன்னொரு பக்கம் வெட்டுக்கிளிகளின் பிரச்னையால் விவசாயிகளின் தொல்லை தீராத ஒன்றாக மாறியிருக்கிறது.

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த குழு அமைத்தல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

2020 ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில், உள்ளூர் வட்டார அலுவலகங்களால் (எல்சிஓ) 2,78,716 ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளிகளால் இரு மாநிலங்களில் கடும் பாதிப்பு – தடுக்க குழு அமைத்தது மத்திய அரசு

ஆகஸ்ட் 22 வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், அரியானா, உத்தராகண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில், 2,87,374 ஹெக்டேர் பரப்பில் மாநில அரசுகளால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்சால்மர், ஜோத்பூர், பிக்கானிர் ஆகிய 3 மாவட்டங்களில், 4 இடங்களிலும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், எல்சிஓ-க்களால் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இரு மாநிலங்களிலும், தேவையான பணியாளர்கள், தெளிப்பு வாகனங்களுடன் கட்டுப்பாட்டுக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

வெட்டுக்கிளிகளால் இரு மாநிலங்களில் கடும் பாதிப்பு – தடுக்க குழு அமைத்தது மத்திய அரசு

குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில், குறிப்பிட்ட அளவுக்கு வெட்டுக்கிளிகளால் பயிர்ச்சேதம் இருந்ததாக தகவல் இல்லை. இருப்பினும், ராஜஸ்தானில், சில மாவட்டங்களில், சிறு அளவுக்குப் பயிர்ச் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்சால்மர், ஜோத்பூர், பிக்கானிர் ஆகிய 3 மாவட்டங்களிலும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகள் நடமாட்டம் தீவிரமாகக் காணப்படுகிறது.