அம்மா உணவகத்திற்கு வந்த வெட்டுக்கிளி! பீதியில் பிடித்து வைத்த பொதுமக்கள்…

 

அம்மா உணவகத்திற்கு வந்த வெட்டுக்கிளி! பீதியில் பிடித்து வைத்த பொதுமக்கள்…

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. அதற்குள் மற்றொரு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவரை பயிர்களை எல்லாம் சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. தற்போது வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்த வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழத்துக்கு வராது என்று தமிழக வேளாண் துறை தெரிவித்தது. ஆனால் தற்போது தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதாகவும் அவை பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின

அம்மா உணவகத்திற்கு வந்த வெட்டுக்கிளி! பீதியில் பிடித்து வைத்த பொதுமக்கள்…

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரே ஒரே வெட்டுக்கிளி தென்பட்டுள்ளது. இயல்புக்கு மாறாகவும், பெரிய அளவில் இருந்தாலும் அச்சமடைந்த பொதுமக்கள் வெட்டுக்கிளியை பிடித்து பாட்டிலில் அடைத்து வைத்தனர்.