பொது போக்குவரத்துக்கு அனுமதி- ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்! முழு விவரம்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு உத்தரவிட்டுள்ளார்.
தளர்வுகள் விவரம்:
காலை 6 முதல் மாலை 7 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மின் சாதனங்கள் விற்பனைக்கு அனுமதி
ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி
கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி
பாத்திர கடைகள், பேன்சி, அழகு சாதன பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகளுக்கும் அனுமதி
ஜெராக்ஸ், சலவை, தையல் அச்சகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி
மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட அனுமதி
23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி
திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி
23 மாவட்டங்களுக்கு இடையே 50% இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி