தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

 

தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,47,144ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 61,923 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,197 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பொதுமுடக்கத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து வரும் 30 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுமுடக்கத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு தமிழக முதலமைச்சரிடம் பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.