BREAKING: தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

 

BREAKING: தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்..31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசித்தார். பின்னர் பொதுப்போக்குவரத்து சேவையை தொடங்குமாறு நிபுணர் குழு பரிந்துரைத்ததன் பேரில், பேருந்து மற்றும் ரயில் சேவைக்கு முதல்வர் அனுமதி அளித்தார். இருப்பினும் கொரோனா தாக்கம் சிறிதும் குறையாததால் மத்திய அரசின் வழிகாட்டுதலை படி ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

BREAKING: தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்

பள்ளிகள், கல்லூரிகள் இயங்குவதற்கான தடை தொடரும்.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு

உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானப் போக்குவரத்து

உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி

கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை தொடரும்

வாரச்சந்தைகள் மட்டும் உரிய வழிகாட்டு நெறிகளை பின்பற்றி இயங்க அனுமதி

அரசு, தனியார் நிறுவனங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுரை