தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

 

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவாரம் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகளை சரியான முறையில் பின்பற்றாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதிகளவில் கூட்டம் சேரும் பகுதிகளை கண்டறிந்தால் அப்பகுதிகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்யலாம் எனவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.