புறநகர் ரயில் சேவை : ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

 

புறநகர் ரயில் சேவை : ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்கக் கோரி முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புறநகர் ரயில் சேவை : ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க உத்தரவிடக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுமக்களுக்கும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புறநகர் ரயில் சேவையை தொடங்க செப்.2 ஆம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது கவனிக்கத்தக்கது.

புறநகர் ரயில் சேவை : ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்நாடு முழுவதும் ரயில் சேவை முடங்கியது. இதில் தமிழகமும் அடங்கும். இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை, மாநிலங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்தும் கடந்த மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.இருப்பினும் புறநகர் ரயில் இயக்கம் இல்லாததால் மக்கள் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.