பாகிஸ்தானில் பெண்ணை பலாத்காரம் செய்த உள்ளூர் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

 

பாகிஸ்தானில் பெண்ணை பலாத்காரம் செய்த உள்ளூர் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

ஒகாரா: பாகிஸ்தானில் பெண் ஒருவரை தாக்கி பலாத்காரம் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் நாட்டின் ஒகாரா மாவட்டத்தில் ஹுஜ்ரா ஷா முகீமின் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு போலீஸ் அதிகாரி பெண் ஒருவரை தாக்கி பலாத்காரம் செய்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். இதையடுத்து அந்த உள்ளூர் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாவட்ட காவல்துறை அதிகாரி (டிபிஓ) உமர் சயீத் மாலிக் ஒரு குழுவை அமைத்தார். இந்த குழு விசாரணையை மேற்கொண்டு மூன்று நாட்களில் தங்கள் அறிக்கையை கொடுக்கும் என்று ஒகாரா காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.