அக்.28-இல் உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

 

அக்.28-இல் உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

ஈரோடு

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் புதன்கிழமை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மைக் காவலர்களுக்கு அரசு அறிவித்த 1000 ரூபாய் ஊதிய உயர்வை உடனடியாக வழங்கவும், கொரோனா சிறப்பு ஊதியத்தை அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கும் வழங்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏஐடியுசி மாநில தலைவர் சுப்பராயன் எம்.பி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.