உள்ளாட்சித் தேர்தல் : வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள்!!

 

உள்ளாட்சித் தேர்தல் :  வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள்!!

தமிழகத்தில் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ,கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி கடந்த 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

உள்ளாட்சித் தேர்தல் :  வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள்!!

இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 23ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் :  வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள்!!

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மொத்தம் 97 ஆயிரத்து 831 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.