உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக இன்று ஆலோசனை!

 

உள்ளாட்சித் தேர்தல்:  அதிமுக இன்று ஆலோசனை!

9 மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை இன்று ஆலோசனை செய்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்:  அதிமுக இன்று ஆலோசனை!

கடந்த ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல்:  அதிமுக இன்று ஆலோசனை!

இந்நிலையில் அதிமுக உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.