“கேரள தேவசம் போர்டு அமைச்சராக பட்டியலினத்தவர்” பினராயிக்கு குவியும் பாராட்டு!

 

“கேரள தேவசம் போர்டு அமைச்சராக பட்டியலினத்தவர்” பினராயிக்கு குவியும் பாராட்டு!

கேரளாவின் தேவசம் போர்டு அமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள முதல்வராக பினராயி விஜயன் நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இவரது அமைச்சரவையில் கேரளாவின் தேவசம் போர்டு எனப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

“கேரள தேவசம் போர்டு அமைச்சராக பட்டியலினத்தவர்” பினராயிக்கு குவியும் பாராட்டு!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கேரள முதல்வராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் ஐயா பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரது தலைமையிலான அமைச்சரவையினருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஐயா பினராயி விஜயன் அவர்கள் தனது புதிய அமைச்சரவையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிபிஎம் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா கே.இராதாகிருஷ்ணன் அவர்களை தேவசம் வாரிய அமைச்சராக நியமித்தது பாராட்டுதற்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் எம்.பி.திருமாவளவன், “கேரளா இராதாகிருஷ்ணன் #தேவசம்போர்டு (இந்து அறநிலையத்துறை) அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். முதல்வர் #பினராயிவிஜயன் அவர்களின் துணிச்சலை #விசிக நெஞ்சார பாராட்டுகிறது. 50ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் #பிஆர்பரமேஸ்வரன். இன்று கேரளாவில் #இராதாகிருஷ்ணன். #வெல்லும்_சமூகநீதி” என்று பாராட்டியுள்ளார்.