செங்கல்பட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் – பெண் உள்பட இருவர் கைது

 

செங்கல்பட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் – பெண் உள்பட இருவர் கைது

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே காரில் கடத்திய ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை பறிமுதல் செய் போலீசார், இதுதொடர்பாக பெண் உள்பட இருவரை கைதுசெய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் சுங்கச் சாவடி வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக, விழுப்புரம் மத்திய புலானாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அச்சரப்பாக்கம் சோதனைச்சாவடியில் ஆய்வாளர் பாலச்சந்தர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனவர்.

செங்கல்பட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் – பெண் உள்பட இருவர் கைது

அப்போது அதிவேகமாக சுங்க சாவடியை கடந்து செல்ல முயன்ற கார் ஒன்றை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காரில் அட்டை பெட்டிகளுக்குள் மறைந்து புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது.

காரில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவற்றை கடத்திவந்த செங்கல்பட்டை சேர்ந்த ஜெயந்தி மற்றும் பாலகுமார் ஆகியோரை கைது செய்து, மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.