ஆம்னி வேனில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய நபர் கைது!

 

ஆம்னி வேனில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய நபர் கைது!

ஈரோடு

கர்நாடகாவில் இருந்து ஈரோட்டுக்கு ஆம்னிவேனில் மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 192 மதுபாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உக்கரம் செல்லும் சாலையில் கடத்தூர் காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னிவேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

ஆம்னி வேனில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய நபர் கைது!

இந்த சோதனையின் போது, காருக்குள் பெட்டி பெட்டியாக கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கார் ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில் பிடிபட்ட நபர் கூடக்கரை தொட்டியபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் (42) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, சம்பத்குமாரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 192 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னிவேனையும் பறிமுதல் செய்தனர்.