குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்வு

 

குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்வு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்த்தப்படுகிறது.

குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்வு

கடந்த ஆண்டு ஊரடங்கு முடிந்து மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன் குவார்ட்டர் விலையில் ரூ.10, ஆஃப் ரூ.20, ஃபுல் ரூ.40, மற்றும் பீர் விலை ரூ.10 வீதம் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுவருகிறது. அதன்படி, குறைந்த ரக மதுவகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்களுக்கு 30 ரூபாயும், உயர் ரக மதுபானங்களுக்கு 50 ரூபாய் வரை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அரசின் அனுமதிக்காக இந்த விலை உயர்வு பட்டியல் காத்திருந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் பழைய சரக்குகளை உடனடியாக விற்று தீர்க்குமாறு அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.