“கருணாநிதியை போல் அளித்த வாக்குறுதிகளை நானும் நிறைவேற்றுவேன்” – மு.க. ஸ்டாலின்

 

“கருணாநிதியை போல் அளித்த வாக்குறுதிகளை நானும் நிறைவேற்றுவேன்” – மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், மு.க. ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் இன்றுமுதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

“கருணாநிதியை போல் அளித்த வாக்குறுதிகளை நானும் நிறைவேற்றுவேன்” – மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் திருவண்ணாமலையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், 100 நாட்களில் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும் ஸ்டாலின் உறுதி; குறைகளுக்கு தீர்வு இல்லையெனில் நீங்கள் கேள்வி கேட்கலாம். தங்கள் பிரச்னைகளை திமுகவால் தான் தீர்க்கமுடியும் என கருதி மக்கள் மனுக்களை அளித்துள்ளனர். கண்களில் கனவுகளுடன் என்னிடம் கோரிக்கை வைத்துள்ள உங்கள் அனைவருடைய நம்பிக்கையையும் நிறைவேற்றுவேன். மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக ஆட்சி அமையும்.விவசாயிகள், நெசவாளர்கள் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது தான் திமுக: 90 வயது வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி: கருணாநிதியை போல் அளித்த வாக்குறுதிகளை நானும் நிறைவேற்றுவேன்” என்றார். இதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டபின், மனுக்கள் அடங்கிய பெட்டியை பாதுகாப்பாக சீல் வைத்தார்.

“கருணாநிதியை போல் அளித்த வாக்குறுதிகளை நானும் நிறைவேற்றுவேன்” – மு.க. ஸ்டாலின்

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இதேபோல் நாளை வேலூர், ஜனவரி 31இல் திருவள்ளூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் ஸ்டாலின். முன்னதாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.