லிப்ட் அறுந்து விழுந்து விபத்து : சைட் இன்ஜினியா் பரிதாப மரணம்!

 

லிப்ட் அறுந்து விழுந்து விபத்து : சைட் இன்ஜினியா் பரிதாப மரணம்!

சாலமங்கலத்தில் அடுக்குமாடி கட்டிட பணியின் போது லிப்ட் அறுந்து விழுந்ததில் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஶ்ரீபெரும்புத்தூரை அடுத்த சாலமங்கலம் கிராமத்தில் சுமார் 420 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 4 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பாக வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் கட்டுமான பணியை சென்னை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்து செய்து வருகிறது. 4ம் தளத்திற்கு பொருட்களை கொண்டு செல்வது சிரமம் என்பதால், பொருட்களை கொண்டு செல்ல தற்காலிக லிப்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

லிப்ட் அறுந்து விழுந்து விபத்து : சைட் இன்ஜினியா் பரிதாப மரணம்!

அதில் இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த சைட் இன்ஜினியா் வேதகிரி (26) மற்றும் தொழிலாளி அய்யனார் (39) ஆகியோர் லிப்ட்டுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வேதகிரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது அய்யனார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.