சாப்பிட்டவுடன் நடந்தால் எதெல்லாம் பாதிக்கும் தெரியுமா?

பொதுவாக உணவு சாபிட்டவுடனே பழங்களை சாப்பிடகூடாது. ஏனெனில் பழங்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.சாப்பிட்டவுடன் எதெல்லாம் செஞ்சா ,எதெல்லாம் பாதிக்கும் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.சாப்பிட்டவுடன் டீ குடிக்க கூடாது. ஏனெனில் டீயில் அதிகபடியான அளவு அமிலங்கள் உள்ளது.
2.இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிமானம் ஆவதை சிக்கலானதாக மாற்றிவிடும்.
3.உணவு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு.
4.சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட்டானது, ஏறகுறைய 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகரிக்கிறது.
5.சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என்று பலர் இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள்.
6.இதனால் சாப்பிட்ட உணவானது உடனடியாக குடலுக்கு சென்று விடுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.
7.சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது மிக தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் சரியான சத்துகள் நம் உடலுக்கு கிடைக்காது.