பீட்ஸா சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் தெரிஞ்சா அந்த பக்கமே போக மாட்டிங்க

 
tips to reduce weight and cholestral

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அந்தக் காலத்தில் வயல்களில் உடல் உழைப்பைக் கொடுப்பவர்கள், காலையில் கேழ்வரகு, கம்மங்கூழைக் குடித்துவிட்டு, உற்சாகத்துடன் செயல்பட்டனர். இந்தக் காலத்திலோ அமர்ந்த நிலையிலே நீண்ட நேரம் மனதளவில் உழைப்பவர்கள், பீட்சாவை முக்கிய உணவாகச் சாப்பிட்டுவிட்டு, பல நோய்களுக்கு வழியமைக்கின்றனர். பீட்சா பல மணிநேரத்துக்குப் பசியை அடக்குமே? நிச்சயமாக, அடுத்த வேளைக்கான பசி உணர்வையும் சேர்த்து அடக்கி, செரிமானம் சார்ந்த நோய்களை உண்டாக்கும். பசியை அடக்குவதோடு சேர்த்து மலத்தையும் அடக்கும். மலத்தை இளக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடப் பழகிவிட்ட நமக்கு, மலத்தை குடலிலேயே கட்டிப்போடும் பீட்சா, நமது மரபுக்கு அந்நிய உணவுதானே!

‘பீட்சா போன்ற உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, இடுப்பைச் சுற்றி அதிகளவில் கொழுப்புச் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்’ என ’The American Journal of Clinical Nutrition ஆய்விதழ் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துவிட்டது. இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பு, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு தூண்டில் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். ஏற்கெனவே தேவையான அளவைவிட அதிகமாக உப்பைப் பயன்படுத்திவருகிறோம். பீட்சாவின் மூலம் இலவசமாகக் கிடைக்கும் உப்பு, அதிவிரைவில் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ‘சீஸ்’ கலந்து சுவைத்துச் சாப்பிடும்போது, கொழுப்புச்சத்தை அதிகரித்து இதயநோய்களை வரவழைக்கும். 

பெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொஞ்சம் புரதச்சத்து கொடுக்கும் சமச்சீரான உணவு அல்ல பீட்சா! அனைத்தையும் அளவுக்கு மீறிக் கொடுக்கும் சமச்சீரற்ற உணவு. பிரத்யேகச் சுவையூட்டிகள், விரைவாகக் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் ரசாயனங்கள், உப்புகள், குளிர்பதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு சேர்க்கப்படும் அசைவத் துண்டுகள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி வெளிவரும் பீட்சாவில் நடைபெறும் வேதியியல் மாற்றங்கள், பீட்சா தயாரிக்கத் தேவைப்படும் பிளீச் செய்யப்பட்ட மாவு வகைகள்… இவை அனைத்தும் சேர்ந்து நமது உடலுக்குள் நடத்தும் களேபரத்தை உணர நீண்ட நாள்கள் காத்திருக்கவேண்டியதில்லை. ’The Pizza effect’ விரைவில் வெளிப்படும். 

சில உணவுகளை (Food) முறை தவறி சாப்பிடுவது உடலின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்

பீட்ஸா மற்றும் சோடா

பீட்ஸா உடன் சோடா பானங்களை சேர்த்து சாப்பிட கூடாது. ஆனால் எதை விரும்பி சாப் பிடுகிறோமோ அதை தவிர்க்க சொல்கிறீர்களே என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் பீட்ஸாவில் இருக்கும் புரதங்கள் மற்றும் ஸ்டார்ச் ஆனது செரிமானம் ஆக தாமதம் எடுத்துகொள்கிறது. சோடாவில் இருக்கும் செயற்கை இனிப்புகள் செரிமா னத்தை கடினமாக்குவதோடு வயிற்றின் பணியிலும் குறைபாட்டை உண்டாக்கி விடுகிறது. அவ்வபோது இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் வயிற்றில் உண்டாகும் மாற்றத்தை உணர முடியும்.

கொழுப்பைக் கூட்டும், உயர் ரத்த அழுத்தம் தரும் பீட்சா... வேண்டாமே! #PizzaHealthEffects

சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிட வேண்டாம்

பெரும்பாலும் மக்கள் உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பழங்களை அரிசி, இறைச்சி அல்லது பிற உணவுகளுடன் அல்லது அதற்குப் பிறகு சாப்பிடும்போது, ​​​​அவை அமிலத்தன்மையை ஏற்படுத்தும் செரிமான அமைப்பில் நீண்ட நேரம் இருக்கும். அவை குடலின் புறணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

எலுமிச்சை மற்றும் இருமல் சிரப்

எலுமிச்சம்பழத்தை இருமல் மருந்துடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது. ஸ்டேடின்கள் மற்றும் பிற மருந்துகளை உடைக்க தேவையான நொதிகளை எலுமிச்சை தடுக்கும். இருமல் சிரப் ஒரு டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் என்றாலும், எலுமிச்சை உட்கொள்வதால் ஸ்டேடினை உடைக்கத் தவறினால், இருமல் சிரப் உங்கள் இரத்த ஓட்டத்தில் சேர்கிறது, இது பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

தானியங்கள் மற்றும் பால்

சிலர் தினமும் காலை உணவாக பால் மற்றும் தானியங்களை சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டும் வேகமாக ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள். அத்தகைய சூழ்நிலையில், அவை இரத்த சர்க்கரையின் கூர்முனையை ஏற்படுத்தும் மற்றும் சர்க்கரை அளவு மீண்டும் குறையும் போது சோர்வாக உணரலாம். இதனால், விரைவில் மீண்டும் பசி எடுக்கத் தொடங்கும்.

உணவு மற்றும் தண்ணீர்

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. சாப்பிட்டு முடிக்கும் வரை தண்ணீர் குடிப்பது ஜீரண மண்டலத்தின் பணியை தாமதமாக்குமாம். நாம் எடுத்து கொள்ளும் உணவிலி ருந்து சத்துகளை உறிஞ்சி சக்கையை வெளியேற்றும் ஜீரண மண்டலத்துக்கு தேவை வயிற்றுக்குள் சுரக்கும் அமில நீர். இந்த சுரப்பு சீராக செயல்பட்டால் செரிமான மண்ட லமும் சீராக செயல்படும்.