புற்று நோயை தடுக்குமாம் இந்த பூசணி விதை -இதன் மற்ற நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க

 
pumpkin

பூசணிக்காய் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது திருஷ்டிக்காக, அது தெருவில் உடைந்துகிடக்கும் காட்சிதான். அதேபோல பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. இது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும் அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள்.
பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் , இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.0

பூசணி விதையின் மருத்துவப்பண்புகள்

ஆழ்ந்த உறக்கத்திற்கு

இவ்விதையில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமானது செரடோனின் மற்றும் நியாசினாக மாற்றம் அடைகிறது. இந்த செரடோனின் உடல் மற்றும் மனத்திற்கு ஆறுதல் அளித்து ஆரோக்கியமான தூக்கத்தினை உண்டாக்குகிறது.

பூசணி விதைகளின் எக்கச்சக்க மருத்துவ மகிமை!

எனவே இதனை உண்டு ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம். இதனால் பூசணி விதை இயற்கை தூக்க மாத்திரை என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இதய நலத்திற்கு

பூசணி விதைகளில் இருக்கும் பைட்டோஸ்டெரால்ஸ், ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

இந்த சேர்மங்கள் இரத்த உறைவு மற்றும் பெருந்தமனி தடிப்பு அழற்சியைத் தடுக்கின்றன. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இவ்விதை குறைகிறது.

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க

இவ்விதையில் உள்ள துத்தநாகச் சத்து நோய் தடுப்பாற்றலை அதிகரித்தல், செல் பிரிதல் மற்றும் வளர்ச்சியை சீராக்குதல், நுகர்திறன் மற்றும் சுவைக்கும் திறனை மேம்படுத்துதல், இன்சுலின் சுரப்பினை சீராக்குதல், தோலினை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு காரணமாகிறது.

இச்சத்து குறைபாட்டால் அடிக்கடி சளித் தொந்தரவு, மனஅழுத்தம், முகப்பரு, கற்றலில் குறைபாடு, குறைந்த எடையளவுள்ள குழந்தை பிறப்பு ஆகியவை உண்டாகிறது. எனவே துத்தநாகச் சத்து குறைபாடுள்ளவர்களுக்கும், நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க விரும்புவர்களுக்கும் இவ்விதைகள் அருமருந்தாகும்.

புற்றுநோயைத் தடை செய்ய

பூசணி விதைகள் வயிறு, நுரையீரல், குடல், மார்பு ஆகிய இடங்களில் புற்றுநோய் உண்டாவது மற்றும் பரவுதலை தடைசெய்கிறது. இவ்விதைகளில் உள்ள லிக்னான்கள் புற்றுநோய் தடுப்பாகவும், ஆன்டிஆக்ஸிஜென்டுகளாகவும் செயல்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

ஒட்டுண்ணியைத் தடுத்தல்

இதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸை தடுக்கும் பண்புகள் ஒட்டுண்ணியைத் தடைசெய்கின்றன. இதில் உள்ள மீடியோ ரெசினோல், பினோ ரெசினோல் மற்றும் லாரிசிரெசினோல் ஆகியவை பாக்டீயா மற்றும் வைரஸ்களை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளன. குடலில் உள்ள தட்டைப்புழுக்களை நீக்க இவ்விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரோக்கியமான மனநிலைக்கு

இவ்விதையில் குளுட்டமேட் என்ற அமினோ அமிலம் அதிகளவு உள்ளது. காமா-அமினோ பியூட்ரிக் அமிலத்தின் தொகுப்புக்கு குளுட்டமேட் மிகவும் அவசியமானது.

காமா-அமினோ பியூட்ரிக் அமிலமானது மூளையில் உள்ள மனஅழுத்தத்தைக் குறைக்கும் வேதிப்பொருளாகும்.

இவ்வேதிப்பொருள் மனஅழுத்தம், பதட்டம், எரிச்சல் உள்ளிட்டவைகளைக் குறைத்து ஆரோக்கியமான மனநிலையை உண்டாக்குகிறது. எனவே பூசணி விதைகளை உண்டு அமைதியான மனநிலையைப் பெறலாம்.

சிறுநீரக கற்கள் உருவாக்கத்தைத் தடுக்க

இவ்விதையில் உள்ள டையூரிட்டிக் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் காரணமாக இது உடலில் உள்ள யூரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு நச்சுக்களை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது.

இதனால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் இவ்விதையானது கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகள் மற்றும் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.

சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு

சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு அமினோ அமிலங்கள் மிகவும் அவசியமானவை ஆகும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. பூசணி விதையில் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது. வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெறக் காரணமான புரதச்சத்தைப் பெற பூசணி விதை அருமையான தேர்வாகும்.

ஆஸ்டியோபோரோஸிஸைத் தடுக்க

வயது ஏறும் போது எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. எலும்புகளின் அடர்த்தி குறையும்போது எலும்பு முறிவு எனப்படும் ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் உண்டாகிறது.

பூசணி விதையில் உள்ள துத்தநாகம், கால்சியம், செம்புச்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கின்றன.

சீராக அடிக்கடி உணவில் இதனைச் சேர்த்துக் கொள்ளும்போது எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு ஆஸ்டியோபோஸிஸ் ஏற்படுவதைத் தடுக்கிறது.

உடலினை வலுவாக்குதல், உள்காயங்களை ஆற்றுதல், சர்க்கரை நோய் உருவாகும் வாய்ப்பினைக் குறைத்தல், ஆண்களில் விந்தணுக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலனை இவ்விதை மேம்படுத்துகிறது.