கற்பூர வள்ளி சாறுகளை மூக்கில் விட்டால் என்னாகும் தெரியுமா ?

 
karpooravalli

சில மூலிகை செடியினை பலரும் அவற்றின் நண்மை பற்றி தெரியாமலே வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருகின்றனர் .அவற்றில் மிக முக்கியமான மூலிகை கற்பூர வள்ளி .இந்த மூலிகை செடியின் மகத்துவம் தெரிந்தால் மூக்கில் விரலை வைப்பீர்கள் .அந்தளவுக்கு இதில் ஆச்சர்யம் கலந்த பலன்கள் அடங்கியுள்ளது .மார்பு சளியால் அவதிப்படுவோருக்கு கற்பூர வள்ளி இலையுடன் ,துளசி இலையை எடுத்து வதக்கி சாறு எடுத்து அதை 5 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குணமாகும் .மேலும் நெஞ்செரிச்சல் முதல் அஜீரண பிரச்சினை வரை இந்த இலையால் குணமாகும் ,மேலும் நம் சிறுநீரகங்களில் சேரும் அதிக அளவு உப்பை இந்த கற்ப்பூர வள்ளி இலைகள் வெளியேற்றும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

nose

1. கற்பூரவள்ளி இலைகளை நன்றாக பிழிந்து சாற்றை எடுத்து சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகள் குறையும்.

2.கற்பூரவள்ளி இலை சாற்றை தொண்டையில் படுமாறு அருந்த வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

3. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது.

4.கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு வந்தால் ப்ரீ ராடிக்கல்ஸ்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து சிறுவயதில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது.