மோர் எந்த நோய்க்கெல்லாம் அருமருந்து தெரியுமா ?.
பொதுவாக மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையல்ல.ஆம் அந்தளவுக்கு அந்த மோரில் ஆரோக்கியம் மிகுந்து காணப்படுகிறது .எனவே இந்த பதிவில் மோரை எப்படி குடித்தால் என்ன நன்மை உண்டாகும் என்று பார்க்கலாம்
1.மோர் ஒரு ஆரோக்கியமான உணவு .உப்பு, சர்க்கரை, புதினா ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம் ஆகியவை தவிர்க்கப்படும்.
2.கோடை வெப்பத்தால் பல நேரங்களில் நம்முடைய கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டு படுத்தியெடுக்கும்
3.அந்த எரிச்சல் நேரத்தில் மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும்.
4.இதனால் கண்களில் இருக்கும் எரியும் உணர்வு நீங்கி , கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும்.
5.அதே போல் சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும்.
6.அப்படி இருந்தால் அந்த சமயத்தில் மோரை சருமத்தில் மோர் தடவவும். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
7.நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவால் அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை என்பது இப்போது பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
8.அதனால் கோடையில் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் உடலில் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மோர் அசிடிட்டிக்கு அரும்மருந்து .
9.அசிடிட்டி நேரத்தில் கொஞ்சம் கல் உப்பு, கருப்புமிளகு, சீரகம் கலந்து மோரை குடித்து பாருங்கள்.
10.உங்கள் உடலில் அமிலத்தன்மை உடனே காணாமல் போய் ஆரோக்கியம் உண்டாகும் .
11.ஆகவே தான் ஆண்களும் பெண்களும் மதியம் மோர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.


