பசிக்காக இல்லாமல் ருசிக்காக சாப்பிடும் இந்த உணவுகள் கல்லீரலையும் கிட்னியையும் நசுக்கிவிடும்

 
kidney

உடல் உறுப்புகளில் மிக முக்கிய உறுப்பாக கல்லீரல் உள்ளது. மென்மையான உறுப்பான கல்லீரல் சுமார் 1 கிலோ எடை கொண்டது.

கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான். பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும்.

கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உயிரை பாதுகாக்கும் முக்கிய உறுப்பான கல்லீரலை கடுமையாக பதம் பார்ப்பது நொறுக்குத் தீனிகள்தான்.

குறிப்பாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப்பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறிவைத்து தாக்குகிறது.

உணவுப் பொருட்களைப் பதப்படுத்தி பாதுகாக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக நாம் நடைமுறைப்படுத்தும் பழக்கம் தான். பாதுகாக்கப்படும் உணவுப் பொருட்களில் ஈரப்பதம் இருந்தால், அதில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிர்கள் வளரும். இதனைத் தவிர்ப்பதற்காக அந்த உணவு பொருட்கள் உலர்த்தப்பட்டு, களிமண் ஜாடிகளில் சேமிக்கப்படும். அதேவேளையில் சில இயற்கையாக பதப்படுத்தும் பொருட்களும் இதில் அடங்கும். உதாரணமாக, சர்க்கரை மற்றும் உப்பு போன்ற இயற்கை பொருட்களும் உணவைப் பதப்படுத்த பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்கள் தான்.

நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சியவற்றை சிறுநீரகம் சுத்திகரிக்கிறது. நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும்.

தற்போது கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, புரோட்டா போன்றவை விற்கப்படுகின்றன. சப்பாத்தி கெடாமல் இருக்க ஒருவகை ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற அரை வேக்காட்டு ரெடிமேடு சப்பாத்திகளை வாங்கி நாம் சாப்பிட்டால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்.

இயற்கை மற்றும் செயற்கை என இரண்டு வகையான உணவைப் பதப்படுத்தும் பொருட்கள் உள்ளன. எண்ணெய் மற்றும் உப்பு போன்ற இயற்கையான பதப்படுத்தும் பொருட்களால், நாம் சேமித்து வைக்கும் உணவுப் பொருட்களின் மேல் எந்தவிதமான வேதியியல் மாற்றமும் நிகழாது. மேலும், இந்த வகைப் பொருட்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து உள்ளன. இவை உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்கவும், கெட்டுப் போவதை தாமதப்படுத்தவும் உதவுகின்றன.

இருப்பினும், பிஎச்ஏ போன்ற செயற்கையான பதப்படுத்தும் பொருட்கள், நாம் பாதுகாக்க நினைக்கும் உணவில் ரசாயன அமைப்பை மாற்றுவதொடு, பல்வேறு சுகாதார பிரச்சனைகளுக்கும் அவை வழி வகுக்கும். மேலும், ஆஸ்துமா மற்றும் உடல் பருமனைத் தூண்டும் வகையிலும் இந்த செயற்கை பதப்படுத்தும் பொருட்கள் இருக்கும். பழங்கள் முதல் சிக்கன் வரை அனைத்து வகையான உணவு பதப்படுத்துதலிலும் இது போன்ற செயற்கை பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.


இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் பார்மசூட்டிகல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் ஆராய்ச்சியின் படி, செயற்கை பொருட்களைக் கொண்டு பதப்படுத்தப்படும் பொருட்களை சாப்பிடும் போது, ஒவ்வாமை, ஆஸ்துமா, ஹைப்பர் ஆக்டிவிட்டி, நரம்பியல் பாதிப்பு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இதுபோன்ற செயற்கை பாதுகாப்பு பொருட்கள் நிறைந்து உள்ள உண்ணும் போது, அது உங்கள் எல்டிஎல் கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும். சாப்பிடும் உணவில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்குவதன் மூலம், இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதோடு, எடையை நிர்வகிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களின் அளவைக் குறைக்கவும் செய்யலாம்.

குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயண குளிர்பானங்களை அருந்த கூடாது, இதெல்லாம் கூட கல்லீரலை பாதிக்கும்.