பல நோய்களை தடுக்கும்னு பந்தயம் கட்ட வைக்கும் வெந்தய கீரை

 

பல நோய்களை தடுக்கும்னு பந்தயம் கட்ட வைக்கும் வெந்தய கீரை

பல நோய்களை தடுக்கும்னு பந்தயம் கட்ட வைக்கும் வெந்தய கீரை

வெந்தயக்கீரைக்கு பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும் வல்லமை உண்டு என்று நம் முன்னோர்கள் சித்த வைத்தியத்தில் கூறியுள்ளார்கள் ,இது எந்தெந்த நோய்களுக்கு சிறந்தது என்று பார்க்கலாம்

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.

வெந்தயத்திற்கு கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தி உள்ளது. இதில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இது செரிமானத்தை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பித்த அமிலங்களின் சுரப்பை குறைக்கிறது. இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கின்றன.

வெந்தயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் பொருட்கள் உள்ளன. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. இது இதயம், நுரையீரல் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்ல உதவுகிறது. வெந்தயம் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தம் உறைதல், கொழுப்பு தேங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளுதல், ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகிய அனைத்தும் செய்யும்  அதிசய பொருள்  என்று கூட இந்த வெந்தயக் கீரையை சொல்லலாம்.அதனால் இதன் மூலம் பல நோய்களை வெல்லலாம் .