“கொரானாவை விட கொரானா பயத்தில் போகும் உயிர்கள்”-அறிகுறியால் வந்த வைரஸ் அச்சத்தில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட வாலிபர் ..
நாட்டில் கொரானா பரவத்தொடங்கிய நாள் முதல் அதைப்பற்றி செய்தியும் ,இறப்புகளும் மக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது .பலர் கொரானாவால் கடும் மனஅழுத்ததில் உள்ளனர் .கொரானா வந்து பலர் குணமான நிலையிலும் இருமல், சளி ,மூச்சு திணறல் வந்தாலே டெஸ்ட் பண்ணாமல் சிலர் அவர்களே கொரானாவாக இருக்கும் என்று முடிவு செய்து பயத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் .
ஹைதராபாத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவருக்கு ஜூலை 3, வெள்ளிக்கிழமை மாலை, அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டது .இதனால் பயந்து போன அவர் ஒரு டாக்டரிடம் சென்றார் .அவரிடம் சிகிச்சையெடுத்தபிறகு அந்த டாக்டர் ஒரு ஹாஸ்பிடலில் சேர்ந்து கொரானா டெஸ்ட் எடுத்து பாருங்கள் என்று கூறினார் .
இதனால் பயந்து போன அவர் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரினார் .ஆனால் அனைத்து மருத்துவமனையிலும் படுக்கைகள் நிரம்பியுள்ளதால் அவருக்கு எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்கவில்லை.இதனால் மனம் நொந்து போன அவர் ஒரு ஆட்டோ பிடித்து டேங்க் பண்டியிலுள்ள ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் .
அந்த ஏரியில் ஒரு உடல் மிதப்பதை ஞாயிற்று கிழமை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரில் போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் .