திருவண்ணாமலையில் நாளை மறுநாள் முதல் கிரிவலம் செல்லலாம்!

 

திருவண்ணாமலையில் நாளை மறுநாள் முதல்  கிரிவலம் செல்லலாம்!

முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்று திருவண்ணாமாலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில். அங்கிருக்கும் மலையே சிவ பெருமானாக கருதப்படுவதால், மக்கள் அனைவரும் மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். 14 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை முழு நிலவு (பௌர்ணமி) அன்று சுற்றி வருவதே உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலையில் நாளை மறுநாள் முதல்  கிரிவலம் செல்லலாம்!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளது. அதனால் கிரிவலம் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலையில்  நாளை மறுநாள் முதல் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 -ஆம் தேதி பௌர்ணமி என்பதால் பக்தர்கள், நவம்பர் 30 -ஆம் தேதி கிரிவலம் வருவார்கள் என்பதால், அன்று கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.