“கல்யாணம் பண்ணுறேன்னு காரியம் பண்ணிட்டியே” -காதலன் கொலையால் கதறிய காதலி

 

“கல்யாணம் பண்ணுறேன்னு காரியம் பண்ணிட்டியே” -காதலன் கொலையால் கதறிய காதலி


ஒரு பெண்ணின் தந்தை தன்னுடைய மகள் காதலிக்கும் காதலனை சிலருடன் சேர்ந்து கொலை செய்து வீசிய சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது
கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தில் வசிக்கும் பசவன்ஹள்ளியைச் சேர்ந்த கே.லட்சுமிபதி என்ற 24 வயது வாலிபர் இஸ்லாம்புராவைச் சேர்ந்த நிஜாமுதீனின் (45)என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார் .இதனால் இருவரின் வீட்டிலும் அவர்களின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது .அப்போது அவர்களின் காதலுக்கு லட்சுமிபதியின் காதலியின் தந்தை நிஜாமுதீன் கடும் எதிர்ப்பை தெரிவித்தார் .

“கல்யாணம் பண்ணுறேன்னு காரியம் பண்ணிட்டியே” -காதலன் கொலையால் கதறிய காதலி


அதனால் லட்சுமிபதி அவரின் காதலியை அழைத்துக்கொண்டு திடீரென ஊரைவிட்டு ஓடிவிட்டார்.அதன்பிறகு காதலியின் தந்தை நிஜாமுதீன் அந்த காதலனிடம் சென்று தாங்கள் விரைவில் ஊரறிய கல்யாணம் செய்து கொடுக்கிறோம் என்று கூறி அழைத்து வந்தனர் .
பிறகு அவரின் பேச்சை நம்பி லட்சுமிபதி தன்னுடைய காதலியோடு ஊருக்கு திரும்பி வந்தார் ,இந்நிலையில் நிஜாமுதீன் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு லட்சுமிபதியின் வீட்டிற்கு சென்று அவரிடம் திருமணம் பற்றி பேசவேண்டுமென்று கூறி அவரை ஒரு தனிமையான இடத்திற்க்கு அழைத்து சென்றனர் .அங்கு லட்சுமிபதியை அவர்கள் நால்வரும் சேர்ந்து கொலை செய்து விட்டனர் .
இந்த கொலை பற்றி அவரின் சகோதரர் நடராஜ் மூலம் கேள்விப்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி ,இந்த கொலையை செய்த நிஜாமுதீன் மற்றும் அவரின் கூட்டாளிகளை கைது செய்து சிறையிலடைத்ததனர் .தன்னுடைய காதலன் லட்சுமிபதியின் உடலை பார்த்து அவரின் காதலி அழுதது கல்நெஞ்சையும் கரைய செய்யும் விதமாக இருந்தது .

“கல்யாணம் பண்ணுறேன்னு காரியம் பண்ணிட்டியே” -காதலன் கொலையால் கதறிய காதலி